
அதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும்
December 6, 2018 10:16 am
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு எதிராக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
225 பேர் ஆதரவளித்தாலும், தமக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், இது தன்னுடைய பிரச்சினை இல்லை, ஜனாதிபதியுடைய பிரச்சினை என்றும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை படியே பிரதமர் நியமிக்க வேண்டும் என்றும், இவ்வாறு கூறுவது பாராளுமன்றத்தை காலால் உதைக்கும் செயல் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது பாராளுமன்ற அமைச்சரவையயே என்று கூறியுள்ள அவர், அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் அமையவே அரசாங்கம் செயற்படுவதாக கூறினார்.
அதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும் என்றும் அந்த எல்லையை வகுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.