
திஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு!
December 2, 2020 10:06 pm
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட ´சொல்லப்படாத கதை´ நூல் இன்று (02) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அந்நூலை பிரதமரிடம் கையளித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது சிறையிலிருந்த 55 தினங்களில் எழுதப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்கவின் ´சொல்லப்படாத கதை´ நூலின் ஒரு அத்தியாயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
சிறையில் இருந்த காலப்பகுதியில் மூன்று முறைகள் திஸ்ஸ அத்தநாயக்கவை காணுவதற்காக சிறைச்சாலைக்கு சென்ற கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தனக்கு நூல் கையளிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், நட்பு ரீதியிலான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.