
கொவிட் பரவல் குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!
April 7, 2021 08:36 pm
இலங்கையில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,962 ஆக அதிகரித்துள்ளது.