
கோபுர கும்பாபிசேகம்
January 31, 2019
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் நேற்று (30) மிகவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது
இவ் ஆலயத்தின் கும்பாவிசேககிரிகைகள் கடந்த 27 ஆம் திகதி விநாயகர் வழிபாடு, ஆசார்யவருணம், அனுக்சை, கோமாதா பூஜையுடன் ஆரம்பமாகிய குப்பாவிசேக கிரிகைகள் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றது.
இன்று காலை புண்யாகவாசனம் யாகசாலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகி கருவரையில் வீற்றுயிருக்கும் துர்க்கையம்மன் மற்றும் வசந்த மண்டவத்தில் அருள்பாலிக்கும் அம்மாளுக்கு விசேட அபிசேங்கங்கள், ஆராதணைகள் என்பன இடம்பெற்றன.
இதனை தொடந்ர்து யாகசாலையின் பூர்ண கும்பாவிசேத்திற்கான மகாபூர்ணாகதி தீபாராணை கிரகப்பிரீதி யாத்திராதானம் அந்தர்பகிர்பலி, திருமுறை பாராயாணம் இடம்பெற்று பூரண கும்பகருவரை யாகசாலையில் இருந்து அந்தனர் சிவாச்சாரியார்களிலால் உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக எடுத்துவரப்பட்டு பின்னர் சுபநேரம் 09.55 மணியளவில் மேற்கு கோபுரவாசத்தின் புதிய கோபுர கும்ப கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டு அபிசேக, ஆராதணைகள் என்பன இடம்பெற்றன.
இக் கும்பாவிசேக கிரிகைகளை சிவ ஸ்ரீ மஹாராஐ ஸ்ரீ து.இரத்தினசபாபதி மற்றும் ஆ. சேதுராஜா ஆகிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இவ் கிரிகைகளை நடாத்தி வைத்தனர்.
இக் கும்பாவிசேத்திற்கு இந்து சமய அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக முன்னேற்றம் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்டார்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
(யாழ். நிருபர் ரமணன்)