
யாழ் தேவியிலிருந்து இரு பெட்டிகள் கழன்று தனித்து பயணித்த மர்மம் என்ன?
May 4, 2014 11:23 am
கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் கழன்று சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ். தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
எனினும் இந்த சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தினர்.
(அத தெரண - தமிழ்)