
பேராதனை வைத்தியசாலை வைத்தியரின் தவறான முடிவு
December 4, 2022 03:51 pm
பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊராபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
54 வயதுடைய பெண் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.