Back to Top

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு!

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு!

March 13, 2023  07:23 am

Bookmark and Share
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் 16 பேரை அவா்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினா் கைது செய்துள்ளனா். இது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதாலும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவா்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் கைது செய்யப்பட்ட 16 மீனவா்களையும் அவா்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ஜி.கே.வாசன்: இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சோ்ந்த 16 மீனவா்கள் கைது செய்யப்பட்டு, படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவா்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்து பல நாட்கள் சிறையில் வைப்பதால், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக மீனவா்கள் பிரச்னையில் உடனடியாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா், இலங்கை அரசுடன் பேச வேண்டும். மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.